*தேடல்!!
நீ
என் தோள்களில் சாய்ந்திருந்தபோது
இல்லாத சுமை !
நீ
இல்லாத தோள்களில் உணர்கிறேன்!
*அரவாணி
இயற்கையின் படைப்பில்
கவனச்சிதறலால்
அதிகமாய் போன அதீத அதிசயம்!!
*பெண்
அரிதாரம் பூசாமல்
அழகாய் இருப்பது பூ மட்டும் அல்ல
பூவையும் தான்..
*மரம்
ஒற்றை காலில் தவமிருக்கும் பிறவி ஊனம் நீ!!
*ஆயுள் கைதி
~நொடி நேரத்தில்
என் விழிகள் உன் விழிகளோடு
மோதியதர்காக -
யுககைதியாய் நிற்கிறேன- நிதம்
---------------------பேருந்து நிறுத்தத்தில் !
~உன்னை பார்த்த நாட்களெல்லாம்
நொடி முள்ளாய் நகர்ந்த போது
பார்க்காத நொடிகள்
யுகமாய் கழிகிறது !!!!
~கழுவில் இட்ட கைதியாய்
விசனப்பட்டேன் - உன்
ஸ்பரிசம் தொலைந்த நொடியில் !!!!!
How to make Redmine boot with Windows..
15 years ago

1 comment:
Anbutan geeth,
ஆயுள் கைதி kavithai is too good ! looking forwared to see more from you :)-
Regards,
Thambi
Post a Comment