மென்மையனவனாய்..
ரசனையானவனாய் ...
வேண்டுமென வேண்டிருந்தேன் !!!
நீ
என் வாழ்வில் இணைந்தாய்
மென்பொருள் வல்லுநராய் !
நிசியில் மின்னும் நட்சத்திரம்
கண்டு கண்ணயர்ந்து
வைகறையின் விடிவெள்ளியைப்
பார்த்து எழப்பழகியவள்!
அதிகாலையில் அயர்ந்து
உறங்கி முற்பகலில் முகம்
பார்ப்பவன் நீ !
சைககளின் முன்னே நான் அமர
என் காதோடு -உன்
இதழ் கொஞ்சும் வார்த்தைகளில்
மதி கிறங்கிய மலைப்பயணம் !!!
மனக்கண் முன்னே ;
நீ
முதலில் கற்று கொண்டதே
காரோட்டிதான் பதினான்கு அகவையிலே!
உன் அம்மா -அன்று
பெருமை பொங்க பகிர்ந்தபோது
கலைந்துவிட்டது மலைப்பயணம்!!
உன் கரங்கள்
என் முகம் ஏந்தி ...
உன் மீசை என்னைச்
சிலிர்க்க செய்யும் கனவில்
நான் !
பளிங்கு முகமதில்
முடியோடு இருப்பது
புருவமும் இமைகளுமாய்
நீ !
காலை நேர அவதியில்
நான் ஊட்டிவிட
மாலை நேர மயக்கத்தில்
உன் கையால் வாங்கும்
கைப்பிடி சோறே
அமுதமேன்றேன் !!!
கரத்தால் உண்பதே
அநாகரீகம் என்னும்
உன்முன்னே !!
மடியினில் சாய்த்து
விரல்களால் நீ
வரையப்போகும் கோலங்களை
எண்ணி ரகசியமாய்
சிரித்த தருணங்கள் நிறைய !!
கணணியை மடியினில்
சாய்த்து மணிக்கணக்கில்
விரல்களால் அழுத்தும்போது
நானும் அழுந்தி போனனேன் !
எதிர் பாரா நொடியில்
இறுக்கி அணைப்பாஎன
எண்ணிய என்னிடம்
அதற்கும் அனுமதி
கோரினாயே!!!!
நாகரீகமாய்...
ஏக்கத்தோடு நான்
சிரிக்க
ஏளனமாய் விதி சிரித்தது :(
மனம் ஏனோ சிந்தித்தது
சில வேளைகளில்
அநாகரீகம் கூட சுகமோ என்று !!!
How to make Redmine boot with Windows..
15 years ago
