Friday, December 7, 2007

நிதர்சனம்!!!!

மென்மையனவனாய்..
ரசனையானவனாய் ...
வேண்டுமென வேண்டிருந்தேன் !!!

நீ
என் வாழ்வில் இணைந்தாய்
மென்பொருள் வல்லுநராய் !


நிசியில் மின்னும் நட்சத்திரம்
கண்டு கண்ணயர்ந்து
வைகறையின் விடிவெள்ளியைப்
பார்த்து எழப்பழகியவள்!

அதிகாலையில் அயர்ந்து
உறங்கி முற்பகலில் முகம்
பார்ப்பவன் நீ !

சைககளின் முன்னே நான் அமர
என் காதோடு -உன்
இதழ் கொஞ்சும் வார்த்தைகளில்
மதி கிறங்கிய மலைப்பயணம் !!!
மனக்கண் முன்னே ;

நீ
முதலில் கற்று கொண்டதே
காரோட்டிதான் பதினான்கு அகவையிலே!
உன் அம்மா -அன்று
பெருமை பொங்க பகிர்ந்தபோது
கலைந்துவிட்டது மலைப்பயணம்!!

உன் கரங்கள்
என் முகம் ஏந்தி ...
உன் மீசை என்னைச்
சிலிர்க்க செய்யும் கனவில்
நான் !

பளிங்கு முகமதில்
முடியோடு இருப்பது
புருவமும் இமைகளுமாய்
நீ !
காலை நேர அவதியில்
நான் ஊட்டிவிட
மாலை நேர மயக்கத்தில்
உன் கையால் வாங்கும்
கைப்பிடி சோறே
அமுதமேன்றேன் !!!

கரத்தால் உண்பதே
அநாகரீகம் என்னும்
உன்முன்னே !!

மடியினில் சாய்த்து
விரல்களால் நீ
வரையப்போகும் கோலங்களை
எண்ணி ரகசியமாய்
சிரித்த தருணங்கள் நிறைய !!

கணணியை மடியினில்
சாய்த்து மணிக்கணக்கில்
விரல்களால் அழுத்தும்போது
நானும் அழுந்தி போனனேன் !

எதிர் பாரா நொடியில்
இறுக்கி அணைப்பாஎன
எண்ணிய என்னிடம்
அதற்கும் அனுமதி
கோரினாயே!!!!
நாகரீகமாய்...
ஏக்கத்தோடு நான்
சிரிக்க
ஏளனமாய் விதி சிரித்தது :(

மனம் ஏனோ சிந்தித்தது
சில வேளைகளில்
அநாகரீகம் கூட சுகமோ என்று !!!

சீனு!!!!

பூ குவியலாய்-நீ
கண்ணயர்ந்த உறக்கம் என்னை
சிதற செய்த வேளை!
வருட எத்தனித்தேன் -நீ
விழிதிடுவயோ அச்சத்தில் அகன்றுவிட்டேன்
நீ உறங்கும் அழகு ஈர்த்து
எடுத்தணைத்து கொண்டேன் !!!
உன் ஸ்பரிசம்
விட்டு விலக நெடு நேரமானது
என் அணைப்பில் நீ நெளிந்து
எழுந்த அழகை வர்ணிக்க
வார்த்தைகளும் வசமிழந்தது!
வைரமாய் மின்னும் கண்கள்
மலரும் தோற்கும் -உன்
சந்தனச் சருமம்
செல்லமாய் சென்நாக்கால்
நீவிடும் நேரம்
மரண வலியும் வலுவிழக்கும்!
எத்தனை யுகங்கள் கண்விழித்தான்
பிரம்மன் உன்னை படைக்க....
தாமதமாய் உறங்கிய இரவுகள் .....
கிண்ணி பாலுக்கு காவலாய் நின்றிந்தேன்
நீ பருகும் வரை .............
அருகாமை தேடி அலறும்
போதெல்லாம் உன்னை
அயர்ந்து உறங்க செய்து
விலகிய தருணம் .....
நா குடித்த புட்டியில்
பால் புகட்டும் போதெல்லாம்
சிலிர்ப்பாய்....
இதழில் எழுந்த புன்னகை !
துவைத்து உலர்த்திய
தூணிகளை தொங்கி பிடித்து
சின்ன பற்களால் கிழித்து
துகிலில் நிலவை காட்டினாயே!
நிமிட எரிச்சலை
துள்ளி யோடி வேடிக்கை செய்து
சுத்தம் செய்தாயே!
உன்னை குளிப்பாட்ட நெருங்கும்
நிமிடம் எங்கடா வாங்குவாய் ?
அந்த கிலி பொங்கும் கண்களை...
கடைக்கண் பார்வை வீசி
கவனத்தை சிதரசெய்து
விளையாடும் போதெல்லாம்
' பிரியா படிக்காம
என்ன விளையாட்டு '
அம்மா அரற்றிய வேளை
எட்டி நின்று பரிகாசம் செய்வாயே !
அப்பா தரும் இயந்திர ஒளியை
இனம் கண்டு வரவேற்க
வாசலுக்கு தவுவாயே !!!!௧
என்னை கலங்கசெய்த
கவலை எல்லாம் பகிர்ந்த நேரம்
என் விழிகளை
உன் விழிகளால் அணைத்து
கேட்டிருந்த கணங்களை ...
என்னோடு சண்டையிட்டு
உதை வாங்கிய நாட்க்களை ..........
நான் கண்ணயர
நீ கண்விழித்த பொழுதுகளை ...
எப்படியடா மறப்பது ?
உருவம் முரடனாய் இருந்தாலே
என் பக்கம் பார்க்ககூட
அனுமதித்த தில்லையே !!
நான் இரும்பு கண்ணியால்
கட்டி வைத்தேன் -நீ
என்னை இமைகளுக்குள்
காத்து நின்றயாய் !!!
தொலைபேசியில் ...
உன் குரைப்பை கேட்ட பின்னே
வைப்பது வழக்கம் !!
இனி என்னை செயவேநேடா ?
நடந்து செல்லும் வழிஎங்கும்
உன் இனம் கண்டதும்
கால்கள் தடை படுதிறது !
கண்ணீர் கங்கை எட்டிப்பார்க்கிறது !!
கண்கள் நகர மறுக்கிறது !!
எந்த நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறாய்?
எமனின் பாசகையிறு -என்
இரும்பு கயிற்றை அறுத்தெறிந்து
பறித்து கொண்டதே !
என்னை பார்க்கதுடித்த
பதறி துடித்த
போகமறுத்த
வலி நிறைந்த நொடிகள்
எதனையடா ?
நேரில் கண்டிருந்தால் கரைந்திருப்பேனோ?
எந்த ஆறுதலும்
தேற்றவில்லை என்னை !
பெயரை உச்சரித்தாலே
வெள்ளமகிறது விழி !
நீ
முதலில் என்னுள் காலடி வைத்த
நாளை ...
என்னை சிரிக்கசெய்த
நிமிடங்களை நிதம் வேணும்
கனவாக ...நின்னை நினைந்து
சிந்தும் கண்ணீர் வேண்டும்
குலுங்கி நான் அழ
நிசப்தமாய் கழியும் நிமிடம் வேண்டும்
அழுது சிவந்த என்
முகத்தில் தென்றலாய்
நீ தீண்ட வேண்டும் !

எந்த இணைவும்
காவியமாவதில்லை
சின்ன பிரிவுதான்
கவிதையாகிறது!!!
என்றும் எனக்கு பிடித்த
கவிதையாய் என் இதயத்தில்
மட்டுமல்ல ; இந்த
இணையத்திலும் !!!



*தேடல்!!

நீ
என் தோள்களில் சாய்ந்திருந்தபோது
இல்லாத சுமை !
நீ
இல்லாத தோள்களில் உணர்கிறேன்!



*அரவாணி

இயற்கையின் படைப்பில்

கவனச்சிதறலால்

அதிகமாய் போன அதீத அதிசயம்!!



*பெண்

அரிதாரம் பூசாமல்

அழகாய் இருப்பது பூ மட்டும் அல்ல

பூவையும் தான்..


*மரம்

ஒற்றை காலில் தவமிருக்கும் பிறவி ஊனம் நீ!!


*ஆயுள் கைதி

~நொடி நேரத்தில்
என் விழிகள் உன் விழிகளோடு
மோதியதர்காக -
யுககைதியாய் நிற்கிறேன- நிதம்
---------------------பேருந்து நிறுத்தத்தில் !

~உன்னை பார்த்த நாட்களெல்லாம்
நொடி முள்ளாய் நகர்ந்த போது
பார்க்காத நொடிகள்
யுகமாய் கழிகிறது !!!!

~கழுவில் இட்ட கைதியாய்
விசனப்பட்டேன் - உன்
ஸ்பரிசம் தொலைந்த நொடியில் !!!!!