Friday, February 6, 2009

தொடர்ந்து வருவாயா நீ ???


முதல் சந்திப்புசின்ன இதழ் விரிப்பில் தொடங்கி இதயத்தில் தொற்றி கொண்டது... மணித்துளிகள் ,நாட்கள்,வாரங்கள்மாதங்கள் ,
வருடங்களாய்... நம்மிடையே நிகழ்ந்த தொலைபேசி அழைப்புகள் இணைந்து காபி பருகிய தருணங்கள் ...எதுவும் எப்போதும் தொடரப்போவதில்லை ...

ப்ராஜெக்ட் டெலிவரி -ஆன்சைட் மீட்டிங் அப்பரைசல் டிஸ்கசன்எந்தன் ஓய்வில்லா அலுவகளிடையே -நம்மின் அழைப்புகளும் சிரிப்புகளின் இடைவெளிகள் அதிகமிருக்கலாம் !!!!அகன்றுபோக அனுமதித்ததில்லை நான்!
பயணங்களில் புதிய உறவுகளும் நட்புகளும் மலர்ந்திருக்கலாம் ...பதியன் போட்டு வளர்ந்து பதிந்து போன நம் நட்பை பழயதன மறுப்பேனோ ????

ஸ்கொர்பிஒ வில் சென்றாலும் தாயின் கைவிரல் பற்றி தளர் நடை பயின்ற நிமிடங்கள் என்றும் இனிய நினைவுகள் ...என் இதயத்தில் உன் நட்பை போல் !!! நேற்று என்னை பற்றி விசாரித்து எனக்கு மெயில் அனுப்பினாய் -இன்றுயாரைப்பற்றியோபார் வார்டு மெயில் !!!
நாளை உன் அட்ரஸ் பூக்கில் இருந்துவிலகி போக விரும்பவில்லை நான் !!!!நீ ?????

எந்த ஊடகம் உன்னையும் என்னையும் விலக்கியது எந்த நினைவு அலைகள் நம்மை அகற்றியது ???
நீ அழைப்பாய் என நானும்நான் தொடர்வேன் என் நீயும் காத்திருந்த நொடிகள் மாதங்களாய் மாறிபோனதும்
உணர்ந்து விட்டேன் -உன்னை தொட்டு விட்டேன் நான் தொடர்ந்து வருவாயா நீ ???