Friday, December 7, 2007

*தேடல்!!

நீ
என் தோள்களில் சாய்ந்திருந்தபோது
இல்லாத சுமை !
நீ
இல்லாத தோள்களில் உணர்கிறேன்!



*அரவாணி

இயற்கையின் படைப்பில்

கவனச்சிதறலால்

அதிகமாய் போன அதீத அதிசயம்!!



*பெண்

அரிதாரம் பூசாமல்

அழகாய் இருப்பது பூ மட்டும் அல்ல

பூவையும் தான்..


*மரம்

ஒற்றை காலில் தவமிருக்கும் பிறவி ஊனம் நீ!!


*ஆயுள் கைதி

~நொடி நேரத்தில்
என் விழிகள் உன் விழிகளோடு
மோதியதர்காக -
யுககைதியாய் நிற்கிறேன- நிதம்
---------------------பேருந்து நிறுத்தத்தில் !

~உன்னை பார்த்த நாட்களெல்லாம்
நொடி முள்ளாய் நகர்ந்த போது
பார்க்காத நொடிகள்
யுகமாய் கழிகிறது !!!!

~கழுவில் இட்ட கைதியாய்
விசனப்பட்டேன் - உன்
ஸ்பரிசம் தொலைந்த நொடியில் !!!!!

1 comment:

Thambidurai said...

Anbutan geeth,
ஆயுள் கைதி kavithai is too good ! looking forwared to see more from you :)-

Regards,
Thambi